Sunday 20 September 2015

Freedom

Many people interpret freedom from their own point of view. But, what ever angle it is looked at, most them will agree on few basic ideas about freedom. Let us discuss it here.

What is freedom?

        Some may think that freedom is allowing anyone to do what ever he or she likes. But, what about it's consequences? What will be it's effect on social life? According to me, freedom is a way of life in which, a person has all rights to do anything he wants only without interfering into other's freedom.

Saturday 19 September 2015

விண்வெளி

        வானில் நாம் காணும் விண்மீன்கள் சிறிதாய் தோன்றினாலும், நம் பூமியை விட பல ஆயிரம் மடங்கும், மேலும் சில பல கோடி மடங்கும் பெரியன.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்

        ஒருவருடைய உருவத்தை பார்த்து அவருடைய பெருமையை எடை போடக் கூடது. அதுபோல, சிறியதாய் தோன்றும் விண்மீன்கள், தங்களுக்குள் பல்வேறு அற்புதங்களையும் சிறப்புகளையும் கொண்டுள்ளன.

        மனிதன் இன்று விண்வெளியை பார்த்து அதிசயிப்பது போல, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், கடலை பார்த்து மனிதன் அதிசயித்தான். கடலுக்கு அப்பால் என்ன இருக்கிறது என பல நூற்றாண்டுகள் தெரியாமலேயே இருந்தான். பின்னர் கப்பல் கட்டி கடலை கடந்தான். இப்போது, செயற்கைக்கோள் மூலம் பூமியின் மேற்பரப்பில் உள்ள அனைத்தையும் நாம் கண்டுகொண்டோம்.

Courtesy https://www.nasa.gov

புளியுமொளவு என்பது என்ன?

        புளியுமொளவு என்பது, தென்தமிழக கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் உள்ள கடற்கரை கிராமங்களிலும், கேரளத்தில் திருவநந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களிலும் (பெரும்பாலும் குமரி மாவட்டத்தில்) எதார்த்த காலை உணவாக கொள்ளப்படுவது. இந்த கிராமங்களில், மீன் தினமும் எல்லா வேளைகளிலும் உணவாக இருப்பதால், மீன் சார்ந்த பலவகையான உணவு வகைகளை இங்கு காணலாம். அவற்றுள் ஒன்று தான் புளியுமொளவு.

திருவிவிலியத்தில் அணிகள்

        விவிலியத்தை இலக்கியம் எனும் கண்களில் நோக்கினால், அதில் பல்வேறு இலக்கண சுவைகள் நிறைந்திருப்பதை காணலாம். அவேற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று அணிகள்.


அணி என்றால்?

        அணி என்பதற்கு அழகு எனும் பொருளும் உண்டு. செய்யுள்களில் அல்லது படைப்புகளில் காணப்படும் சொல் அல்லது பொருள் அழகினை எடுத்துச் சொல்வதே அணி. அணிகள் பல வகை என்றாலும், நம் விவிலியத்தில் காணப்படும் அணிகளில் மூன்றினை இப்போது காணலாம்.

Monday 27 July 2015

வட்டார வழக்கு

        வட்டார வழக்கு குறித்து பலருக்கும் பல்வேறு கருத்துகள் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலர் வட்டர வழக்கை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை, சிலர் அதை பெருமையாக நினைக்கிறார்கள், சிலர் அது கொச்சையானது என கருதுகிறார்கள்.

        முதலில், நம் குழந்தைகளுக்கு வட்டர வழக்கு பற்றி விளக்கும் கடமையும் நமக்கு
உள்ளது. வட்டார வழக்கு என்பது ஒருகுறிப்பிட்ட இடத்தில் ஒரு மொழி எவ்வாறு பேசப்படுகிறது, அதன் உச்சரிப்பு எப்படி இருக்கிறது என்பதை வைத்தே அமையும். எடுத்துக்காட்டாக, குமரி மாவட்டத்தில் பேசப்படுவது போல தமிழ், சேலம் மற்றும் கோவையை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் பேசப்படுவது இல்லை. சென்னையில் வேறு விதமான தமிழ் உச்சரிப்பு உள்ளது. இது போலவே மலையாளமும் திருவனந்தபுரம், கோழிக்கோடு, திருச்சூர், காசர்கோடு போன்ற பகுதிகளில் வெவ்வேறாக உச்சரிக்கப்படுகிறது. ஆங்கிலத்திலும், இந்தியிலும் உலகின் பல்வேறு மொழிகளிலும் இது போலவே பல்வேறு வட்டார வழ்க்குகள் உள்ளன.

Sunday 1 February 2015

ஈகை (சிறுகதை)




பெங்களுரு இரயில் நிலையம்.

"யாத்ரியோன் கிருப்பியாத்தியான் மே", என்று

பேரிரைச்சலையாய் வந்து கொண்டிருந்த ஒலியையும் கவனிக்காமல், இரு வாலிபர்கள் பிருந்தாவன் அதிவிரைவு வண்டியில் அமர்ந்திருந்தனர். பண்டங்கள் விற்பவர்களும், சக பயணிகளும் அங்கும் இங்கும் சென்றவாறு இருந்தனர். அப்போது ஒரு 14-15 வயது மதிக்கத்தக்க சிறுவன் இரயிலில் கஷ்டப்பட்டு ஏறினான். அவன் அணிந்திருந்த வெள்ளைச் சட்டையும், கால் சட்டையும் நிறம் முற்றிலுமாய் மாறி கிட்டத்தட்ட கட்டன் சாயா போல் இருந்தது. தலைமுடி அழுக்கேறி சவைத்து துப்பிய கருமபுச் சக்கை போல இருந்தது. இரு கால்களையும் இழந்தவனாய் ஈந்து வந்து கொண்டிருந்தான். இரயிலில் இருந்த பயணிகள் யாரும் அவனுக்கு உதவ முன்வருவதாய் இல்லை. பெரும்பாலானோர் அவனை
கண்டுகொள்ளாமல் இருந்தனர். இதை கவனித்த சூரியா,